சமூகவியல் என்பது தனிமனிதன், மனித குழுக்கள், சமூக நிறுவனங்கள் என்பனவற்றை ஆய்விற்குட்படுத்தும் ஒரு கற்கைநெறியாக காணப்படுகின்றது. இக் கற்கை சமூக நிறுவனங்களின் கட்டடைப்பு, சமூகத்தில் ஏற்படும் மாற்றம், பிரச்சினை என்பனவற்றை அறிவியல் ரீதியில் கற்கின்றது. அவ்வகையில் சமூக அடுக்கமைவு என்பதும் சமூகவியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. சமூகவியலில் சமூக அடுக்கமைவு எனும் பதம் சமூக நிலைப்பாட்டின் அமைப்பை வரையறுக்கப்பயன்படுத்தப்படுகின்றது. அதாவது சமூக அடுக்கமைவு என்பது செல்வம், வருமானம், கல்வி, குடும்ப பின்னனி மற்றும் அதிகாரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களை தரவரிசையாக வகைப்படுத்துவதை குறிக்கின்றது.
இச் சமூக அடுக்கமைவில் பல காரணிகளின் தாக்கம் காணப்படுகின்றது. அவை இனம், தொழில், கல்வி, மொழி, பால்நிலை, அதிகாரம் போன்றனவாகும். இக் காரணங்கள் பெரும்பாலும் சமூக பொருளாதார ரீதியிலேயே காணப்படுகின்றது. அதிலும் செல்வம், வருமானம், தொழில் போன்ற பொருளாதார ரீதியான காரணங்களின் செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகின்றது. சமூகத்தில் அடுக்கமைவு ஏற்படுவதற்கு பொருளாதாரம் பிரதான பங்கினை கொண்டுள்ளது.
மனிதன் ஆதியில் எதுவும் இல்லாதவனாக இருந்து எழிமையான வாழ்வை மேற்கொண்டான் பின் மனிதர்களிடையே தேவைகள் அதிகரித்தன இதன் வழி சொத்துக்களை சேகரிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. இது சமூக அடுக்கமைவிற்கு காரணமாக அமைந்தது. பொருளாதாரத்திலும் செல்வத்திலும் அடிப்படையானது உற்பத்திக் காரணிகள் உற்பத்தி ஒன்றை மேற்கொள்ள தேவையான நிலம், மூலதனம், முயற்சி மற்றும் உழைப்பு என்பனவே உற்பத்தி காரணிகளாகும். இக் காரணிகளின் சமமற்ற தன்மை சமூகத்தில் அடுக்கமைவினை ஏற்படுத்துகின்றது. உற்பத்தி காரணிகளில் முலதனம், நிலம், முயற்சி என்பனவற்றை கொண்டிருக்கும் முதலாளி சமூக அடுக்கமைவில் உயர் வர்க்கமாக கருதப்படும் அதேவேளை உழைப்பை மட்டும் கொண்டிருக்கும் தொழிலாளி சமூக அடுக்கமைவில் தாழ் நிலையிலே காணப்படுகின்றான்.
இதே போல வருமானம் எனும் பொருளாதார காரணியும் சமூகத்தில் அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது. தற்கால நடைமுறையில் தொழிலாளிகள் எனும் வர்கத்தில் அதிக வருமானத்தை பெறுபவர் குறைந்த வருமானத்தை பெறுபவர் என்ற அடுக்கமைவு தோன்றி இருப்பதை அவதானிக்கலாம். ஒரு நிறுவனத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களிடையே அதிக வருமானத்தையும் ஊக்குவிப்பு தொகைகளையும் பெறுபவர்கள் உயர்நிலையில் வைத்து நோக்கப்படுகின்றனர். அதேவேளை குறைவான வருமானம் பெறுபவர்கள் தாழ்நிலையில் நோக்கப்படுகின்றனர். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் முகாமையாளரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளியும் ஓரே மட்டத்தில் வைத்து பார்க்கப்படுவதில்லை இவர்களிடையே உயர்வு தாழ்வு ஏற்படுதற்கு அவர்கள் பெறும் வருமானமும் ஒரு காரணமாகவே அமைகின்றது.
பொருளாதாரத்தில் போட்டி என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. தொழில் ரீதியான போட்டி சந்தை ரீதியான போட்டி என பொருளாதாரம் இப் போட்டிகளின் அடிப்படையிலேயே வளர்ச்சி பெறுகின்றது. இதே போட்டி நிலையின் மூலம் சமூக அடுக்கமைவும் வளர்ச்சி பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. தொழில் ரீதியில் நல்ல வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். நல்ல வருமானம், கொளரவம் மிக்க தொழிலை பெற வேண்டும் என்று தொழில் ரீதியில் போட்டி ஏற்படுகின்றது. இது மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டிற்கு தற்காலத்தில் அரச தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வதில் உள்ள போட்டியை குறிப்பிடலாம். இப் போட்டியில் சிலர் அரச தொழிலை பெற்றுக் கொள்கின்றனர் சிலர் அரச தொழிலை பெற தவறுகின்றனர். ஆனால் சமூகத்தில் அரச தொழில் புரியும் நபர்களுக்கே அதிக மரியாதையும் கௌரவமும் கிடைப்பதை காணலாம். இவ்வாறு தொழில் ரீதியான போட்டி சமூக அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது.
இதேபோல் சந்தை வாய்ப்பு அல்லது சந்தைக்கான போட்டியும் அடுக்கமைவை ஏறபடுத்துகின்றது. அதிக சந்தை வாய்பை பெற்றுக் கொள்ளும் பல் தேசிய உற்பத்தி நிறுவனங்களுக்கும். குறைவான சந்தை வாய்பை பெற்றுக்கொள்ளும் உள்நாட்டு நிறுசனங்களிடையே காணப்படும் வேறுபாடு இவ் அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டிற்கு பெப்சி குளிர்பானம் விற்கும் கடையின் உரிமையாளருக்கும் ஒரு இளநீர் விற்கும் தெருவோர கடை உரிமையாளருக்கும் இடையிலான வேறுபாட்டினை கூறலாம். இங்கு இருவரும் குளிர்பானங்களையே விற்பனை செய்கின்றனர் எனினும் சமூகத்தில் இவர்களிடையே வேறுபாடு இருப்பதை காணலாம். பெப்சி அதிக சந்தை வாய்பை கொண்டுள்ளது சர்வதேச ரீதியில் விற்பனையாகின்றது, அதற்கு அதிக விளப்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் அதனை அருந்துவது அதிகமாகின்றது. இதை விற்பருக்கு இலாபம் ஏற்படுகின்றது. இதே நிலை இளநீர் விற்கும் வியாபாரிக்கு ஏற்படுவதில்லை. அதை போலவே ஒரு பெரிய கடையில் ஆடைகளை காட்சிப்படுத்தி விற்பவரையும், வீடு வீடா கூவி ஆடைகளை விற்பவரையும் சமூகம் ஓரே பார்வையில் பார்பதில்லை. இங்கு உயர்வு தாழ்வு என்ற அடுக்கமைவு ஏற்பட சந்தை வாய்பு ஒரு காரணமாக அமைகின்றது.
அடுத்து உலகலாவிய ரீதியில் அடுக்கமைவு ஏற்பட வளப்பகிர்வு எனும் பொருளாதார அம்சம் காரணமாக அமைகின்றது. பொருளதார ரீதியில் நாடுகளுக்கு நாடு வளப்பகிர்வும் அதனை வினைத்திறனாக பயன்னடுத்தும் தன்மையும் மாறுபடுகின்றது. இது அடுக்கமைவை ஏற்படுத்துகின்றது. வளங்களை வினைத்திறனாக பயன்னடுத்தும் மக்கள் வாழும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடாக கருதப்படும் அதேவேளை வளத்தினை அதிகம் கொண்டிராத அதனை வினைத்திறனாக பயன்படுத்த முடியாத நாடுகள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு சமூக அடுக்கமைவு ஏற்படுத்துவதில் அதிகமான பொருளாதாரம் செல்வாக்கு செலுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.
No comments:
Post a Comment