தக்கணத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி சம கால அரசுகளுக்கு சவாலாக இருந்தான்.
இந்திய வரலாற்றினை நோக்கும் போது வடஇந்தியாவில் சாளுக்கிய பேரரசு ஆட்சிகாலமானது
மிகவும் சிறப்பான ஓர் ஆட்சிகாலமாக காணப்பட்டது. அந்தவகையில் சாளுக்கிய மன்னர்கள்
இந்தியாவின் தெற்கு பகுதி தொடக்கம் மத்திய இந்தியாவின் பெரும்பகுதி வரை செல்வாக்கு
பெற்று விளங்கினர். கி.பி 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கு
இடைப்பட்ட காலப்பகுதியில் சாளுக்கியர்கள் இந்தியாவில் சகலவிதத்திலும் அதாவது அரசியல்
சமூகம் சமயம் மற்றும் பொருளாதார ரீதியாகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களாக
காணப்படுகின்றனர்.
சாளுக்கியர்களின் ஆட்சிக்கு முன்னர் தக்கண பிரதேசத்தை சாதவாகன பேரரசு ஆட்சிசெய்தது.
இப்பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் சாளுக்கியர்கள் தமது ஆட்சியினை நிறுவிக்கொண்டனர். மேலும்
இந்திய வரலாற்றில் பல்லவர்கள் தவிர தக்கணத்தில் ஆட்சி புரிந்த மேலைச்சாளுக்கியரும்
இராஷ்டிரகூடர்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக காணப்பட்டனர்.
இவ்விருவர்களுக்கும் தெற்கே பல்லவர்களும் சோழர்களும் போட்டியாளர்களாக இருந்தனர்.
சாளுக்கியர்களின் புகழ் பல்வேறு இடங்களிலும் பரவியிருந்தமையை வரலாற்று ஆதாரங்களை
அடிப்படையாகக் கொண்டு நோக்கமுடிகின்றது.
சாளுக்கிய அரச வம்சத்தை ஆரம்பித்து வைத்தவன் 1ஆம் புலிகேசி என்பவனாவான். புலிகேசி
என்ற வார்த்தையின் அர்த்தம் 'சிங்கேறு போன்றோன்' என்பதாகும். கி.பி 543 – 544 வரையில்
பாதிபக்கு அண்மையில் உள்ள மலையை 1ம் புலிகேசி அரணாக ஆக்கி கொண்டான் பின்னர்
இவன் அசுவமேத யாகம் ஒன்று செய்து தனது சுதந்திரத்தை பிரகடணப்படுத்தி கொண்டான்.
மலப்பிரபா ஆற்றில் இருந்து மூன்று மைல் தொலைவில் தற்காப்புக்கு ஏற்ற சிறப்பியல்புகளுடன்
கூடியதாய் இவ் அரண் விளங்கியது. மலைகள் மத்தியில் கிழக்கில் அமைந்துள்ள மகாகூடம்
ஆற்றங்கரை ஓரமாக கிழக்குதிசையில் மகாகூடத்தினின்று 5மைல் தொலைவில் உள்ள பத்தடக்கல்
ஆற்றின் பள்ளத்தாக்கில் பத்தடக்காரில் இருந்து 8 மைல் தொலைவில் விளங்கும் ஐகோல் ஆகிய
இடங்கள் சாளுக்கிய மேலாதிக்கம் நெடுநாள் நிலை பெற்றமைக்கு சான்று பகர்கின்றன. அங்குள்ள
கோவில்களும் கல்வெட்டுக்களும் கூட மேலாதிக்கம் புரிந்த சாளுக்கியரின் காலம் பற்றி
கூறுகின்றன.
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்டு விளங்கும் சாளுக்கிய அரச வம்சத்தின் முக்கிய
ஆட்சியாளராக 2ம் புலிகேசி விளங்குகின்றார். ஐஹோலே கல்வெட்டு அவரது ஆட்சிக் காலத்தைப்
பற்றிய விபரங்களை கூறுகின்ற வரலாற்று சான்றாதாரமாக காணப்படுகின்றது. 2ம் புலிகேசி
மன்னனின் காலப்பகுதியானது கி.பி 609- கி.பி 642 வரையானதாக் அறியப்படுகின்றது. மேலும்
சாளுக்கிய வம்சத்தவர்களின் ஆட்சியானது பலம் பொருந்திய ஆட்சியாக காணப்படுகின்றது. மேலும்
இவனது ஆட்சி காலத்தில் சாளுக்கிய பேரரசு தக்கணத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக
விளங்கியது. அந்த வகையில் இவனது இயற்பெயர் ஏரேயா (இறையா) என்பதாகும். முடி சூட்டிக்
கொண்ட போதும் 2ம் புலிகேசி என்ற பெயர் பெற்றான். இவன் சாளுக்கிய மன்னனான 1ம்
கீர்த்திவரம்மனின் மகன் ஆவான் கி.பி 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை இறந்த போது இவன்
மிகவும் இளம் வயதினனாக இருந்தான்.
இதனால் இவனது சிற்றப்பன் மங்களேசன் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான்
மங்களேசனும் திறமையான ஆட்சியாளனாகவே இருந்தான். அவனது காலத்திலும் சாளுக்கிய
அரசனின் எல்லைகள் விரிவடைந்தன பதவி ஆசைகள் காரணமாக ஏரேயா பருவமடைந்த பின்னரும்
அவனுக்கு அரசுரிமையைக் கொடுக்காமல் தனது வழியில் அரசுரிமையை தக்கவைப்பதற்காக
தனது மகனை முடிக்குரியவனாக மங்களேசன் அறிவித்தான். ஏரேயா வாதாபியை விட்டு சென்று
வானவப் (கோலார்) பகுதியில் மறைந்து இருந்து கொண்டு தனது நண்பர்களின் உதவியுடன்
படைதிரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். வேட்டவடக்கூர் கல்வெட்டு கூறுவதன் படி
எலப்பட்டு சிம்பிகே (இலப்பட்டுசிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன்
தோல்வியடைந்து கொல்லபட்டான். ஏரேயா 2ம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய மன்னன்
அரியணையில் அமர்ந்தான்.
அந்த வகையில் கி.பி 610 இல் புலிகேசி சாளுக்கிய நாட்டிற்கு அதிபதியானான். மார்ஸ்டன்
துரையும் வின்ஸென்ட் ஸ்மித் என்பவரும் கி.பி 608 இல் புலிகேசி அரியனையில் ஏறினான் என்பர.;
மேலும் புலிகேசி அரசை அடைந்ததும் தான் செய்ய வேண்டியது பல என அறிந்து கொண்டான்.
தன் தம்பிமார்களை தனக்கு துணையாக வைத்துக் கொண்டான். மேலும் புலிகேசி
அரசுபுரியலாகினான். சாளுக்கிய தேசத்து குடிகள் புலிகேசி அரசன் ஆட்சிக்கு வந்ததையிட்டு
களிகூர்ந்தனர். புலிகேசியின் அரச சபையில் எந்தவொரு துன்பமும் எற்படவில்லை புலிகேசி தன்
நாட்டிற்கு பல நன்மைகளை புரிந்தான் மேலும் புலிகேசி மன்னன் பல வரிகளை குறைத்து ஒரு
பங்கு நிலவரியாக மட்டும் பெற்று வந்தார் நாட்டில் ஆங்காங்கு நீதிமன்றங்களை நிறுவினான். மேலும்
இயன்றளவு குடிமக்களுக்கு நன்மைகளை புரிந்தான்.
அந்த வகையில் புலிகேசி மன்னனின் போர் வீரம் பற்றி ஆராய்ந்தால் புலிகேசி மன்னன்
கடம்பர்களையும் மேலைக்கங்கர்களையும் தோற்கடித்தார். கொங்கணத்து அரசர்களை கடற்போரில்
வென்றார். ஹர்சவர்த்தனர். நர்மதையாற்றை கடந்து தக்கணத்திற் புகாதவாறு அவர் தடுத்தார்
மாலவகூச்சர மன்னர்களை புறங்கண்டார். கலிங்கத்தை வென்று கோசலர்களை அடிமைப்படுத்தினார்
ஆந்திர நாட்டில் உள்ள பித்தாபுரம் அவரால் கைப்பற்றபட்டது. இவற்றுக்கெல்லாம். மேலாக
சாளுக்கியர்களின் இயற்கை பகைவர்கள் என்று வரலாற்றில் கருதப்படும் பல்லவர்களையும்
வென்றார். ஆய்ஹொளெக் கல்வெட்டு அம் மன்னர் காவிரி ஆற்றை கடந்து தமிழகத்தின் தென்
பகுதியில் உள்ள அரசுகளையும் வென்றதாகக் கூறுகின்றது. இவ் அரிய செய்திகளை தரும்
கல்வெட்டு ரவிகீர்த்தி என்பவனால் இயற்றப்பட்டது. அவர் அக் கல்வெட்டில் தன் பெயரை
குறிப்பிட்டுக் கொள்வதுடன் தான் காளிதாசரைப் போலவே புகழ் எய்துவிட்டதாகவும் கூறுகின்றார்.
மேலும் 2ம் புலி;கேசி மன்னர் சத்தியாச்சரயர் ப்ரிதி வல்லபர் பரம மகேஸ்வரர் முதலிய பெயர்களை
தரித்தார் அவரது ஆட்சி பரப்பு ஹர்ஷர் ஆட்சி பரப்பை மிஞ்சியது. அவர் தக்கணம் முழுவதையும்
ஆண்டார் என்பதில் ஐயமில்லை மேலும் 2ம் புலிகேசி மன்னன் காஞ்சியில் ஆட்சி செய்த
பல்லவர்களோடு பகைத்து வென்றார். சாளுக்கியர் ஆயினும் பல்லவர் கல்வெட்டு ஒன்றில் பல்லவ
மகேந்திர வர்மன் பகைவரை வென்றார் என்று குறிக்கின்றது. சாளுக்கியர்கள் பல்லவரை வென்று
அவர்கள் அரசியல் பகுதியை ஆட்சியில் அடக்கி கொண்டார்.
கி.பி 641 இல் சீன யாத்திரிகர் யுவான் சுவாங் புலிகேசியின் அவைக்களத்தில் தங்கினார்.
மகாராஷ்டிர மன்னர் தனது காலாள் யானைகளைக் கொண்டு அயல் மன்னர்களைப்
பொருட்படுத்தாது இருந்தார் என்கிறார். அந்த யாத்திரிகர் புலிகேசி ஹர்ஷரை இருபது
ஆண்டுகளுக்கு முன்பு தோற்கடித்த செய்தியைத்தான் அவர் இங்ஙணம் குறிப்பிடுகிறார். மேலும்
சாளுக்கியர் செங்கோல் செலுத்தினர் என்றும் மக்கள் அமைதியோடு வாழ்ந்தனர் என்றும் அவர்
கூறுகின்றார். பல்லவர் சாளுக்கியர்களுக்கிடையே எழுந்த நெடுநாட் பகைமை முற்றி
மகேந்திரவர்மனின் மகனான நரசிம்மவர்மன் 1ஆம் பல்லவர் தலைநகருக்கு அருகில் உள்ள
மணிமங்கலம் எனும் இடத்தில் சாளுக்கியரை வென்றதோடு அமையாது தமது படைகளை
தலைமை தாங்கிச்சென்றவர் பரஞ்தோசியர் என்னும் சிவபக்தர் என்று திருத்தொண்டர்புராணம் கூறும்
பல்லவர் படைகள் வாதாபியை கைப்பற்றி அழித்தன. அந்நகர் இருந்த இடத்தில் வெற்றித்தூண்
ஒன்று நாட்டம் பெற்றது. நரசிம்மவர்மன் ஹர்ஷவர்த்தனரையும் தமது தந்தையாரான
மகேந்திரவர்மனையும் வென்றார் புலிகேசி. மேலும் 2ம் புலிகேசி மன்னன் சமகால அரசர்களுக்கு
பெரும் சவாலாக விளங்கியமைக்கு மிக முக்கியகாரணம் அவனால் மேற்கொள்ளப்பட்ட போர்கள்
அவனால் ஆற்றப்பட்ட சமய தேவைகள் மற்றும் ஆட்சி விஸ்தரிப்பு என்பனவாகும்.
அதாவது இவன் ஆட்சி காலத்தில் தெற்கே பல்லவ நாட்டில் வடக்கு எல்லை வரையும்
விரிவடைந்து இருந்தது இவனது ஆட்சி கால சிறப்பம்சமாகும். எனவே இந்த செயற்பாடானது
அக்கால மன்னர்களுக்கு பெரும் சவாலாகவும் அமைந்தது. 2ம் புலிகேசி மன்னன் தென் கிழக்கு
தக்கணத்தில் விஷ்னுகுண்டினர்களையும் தோற்கடித்து தனது ஆட்சியை இன்னும் விஸ்தரித்தான்.
இவ்வாறு இம் மன்னனால் மேற்கொள்ளபட்ட ஆட்சி நெருக்கமானது தென்னிந்திய வரலாற்றில் மிக
முக்கியமான செயற்பாடாக காணப்படுவதோடு மட்டுமன்றி சமகால அரசர்களுக்கும் பெரும்
சவாலாகவும் அமைந்தது.
2ம் புலிகேசி மன்னனது சவால்களில் மிக முக்கியமான செயற்பாடாக அவனது போர் முறை
காணப்பட்டது. அதாவது இவன் வானவாசி , கடம்பர்கள் , தலைக்காடு கங்கர்கள் அது மட்டுமின்றி
கொங்கன் மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியேர்ரை 2ம்புலிகேசி மன்னன் போரில் வெற்றி
கண்டான். இவ்வாறு இம் மன்னனால் மேற்கொள்ளப்பட்ட போர் முறையானது. அவனுக்கு சவாலாக
இருந்தாலும். சமகால மன்னர்களுக்கு அது பெரும் சவாலாகவும் விளங்கியது. அது மட்டுமின்றி
விஷ்னுவர்தனின் ஆட்சி விரிவாகாத வண்ணம் தடுத்து நிறுத்தியதும். வரலாற்றில் முக்கியமான
அம்சமாக கொள்ளப்பட்டது.
2ம்புலிகேசி மன்னன் சமகால அரசர்களுக்கு பெரும் சவாலாக விளங்கியதற்கு அடிப்படை காரணம்
அவனது போர் முறைகளும் நாட்டை வென்று எடுத்த விதமு;மாகும். உதாரணமாக இவன் பல
நாடுகளை கைப்பற்றியதனால் இவனது கீர்த்தியும் புகழும் பாரதகண்டம் முழுவதும் பரவலாயின.
இவ்வாறு இவனால் நாட்டை கைப்பற்றி ஆட்சிசெய்த விதமானது அக்கால மன்னர்களுக்கு பெரும்
சவாலாகவே காணப்பட்டன.
2ம்புலிகேசி மன்னன் சாளுக்கிய குலதிலகன் என்றும் சாளுக்கிய குலோத்துங்கன் என்றும்
அழைக்கப்பட்டான். இதற்கு காரணம் இவனது ஆட்சிகாலத்தில் இவனால் மேற்கொள்ளப்பட்ட
சேவைகளும் பொறுப்புக்களும் ஆகும். 2ஆம் புலிகேசி மன்னன் ஒரு இந்து அரசனாக இருந்த
போதிலும் அவன் ஏனைய மதமான பௌத்த மதத்தையும் பாதுகாத்தான். உதாரணமாக இவனது
ஆட்சிகாலத்தில் 100 பௌத்த விகாரைகள் இருந்ததாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு இம்மன்னனால் ஆற்றப்பட்ட சேவைகளும் அவனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களும்
;சமகால மன்னர்களுக்கு சவாலாகவே இருந்தது.
2ஆம் புலிகேசி மன்னன் வேற்றுமை இன்றி உதவிகள் பல புரிந்தான் இதனால் தான் வாதாபி
நகரத்து மக்களும் சாளுக்கிய இராஜ்ஜிய குடிகளும் மன்னனிடம் அன்பாகவும் ஒற்றுமையாகவும்
மன்னனுக்கு உதவிகள் புரிபவர்களாகவும் இருந்தனர். ஆகவே இதுவும் அவனது வீரத்தினை
வெளிப்படுத்தும் அம்சம் என்பதால் சமகால மன்னர்களுக்கு சவாலாகவே காணப்பட்டது. 2ஆம்
புலிகேசி மன்னன் கடம்பர்களை வென்று வந்தபோது அவனால் அமைதியாக அரசாட்சி செய்ய
முடியவில்லை ஏனெனில் சாளுக்கிய இராஜ்ஜியத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று
பகைவர்கள் பலர் இருந்தமையே காரணமாகும். இதுவும் மன்னனுக்கு சவாலாக அமைந்தமையை
அறியமுடிகின்றது ஆயினும் பகைவர்களை வென்று சாளுக்கிய பேரரசை தென்னிந்தியாவில்
கட்டியெழுப்பினான். இதுவும் சமகால மன்னர்களுக்கு இருந்த பாரிய சவாலாக அமைந்தது.
தக்கணத்து சாளுக்கிய மன்னன் 2ஆம் புலிகேசி சமகால அரசர்களுக்கு சவாலாக
விளங்கியமைக்கு அவனது போர்த் தந்திரங்கள் கையாண்ட நுணுக்கங்கள் படை பலம்
போன்றவற்றை பிரதானமாகக் குறிப்பிடலாம். அதிலும் பல்லவர்கள் சோழர்கள் ஆட்சி முறைக்கு
மாறாக சாளுக்கிய ஆட்சி முறையில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டே இருந்தது. சாளுக்கியரின்
கீழ் கிராம சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சாளுக்கியர்கள் சிறந்த கடற்படையைக்
கொண்டிருந்தனர். 2ஆம் புலிகேசியின் கடற்படையில் 100 கப்பல்கள் இருந்தன. மேலும் நிரந்தரமான
சிறுபடையையும் அவர்கள் வைத்திருந்தனர். அதேபோன்று வானவாசி கடம்பர்கள் தலைக்காடு
கங்கர்கள் கொங்கன்மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியோரை வெற்றி கொண்டது
மட்டுமல்லாமல் ஹர்ஷவர்த்தனரை போரில்தோற்கடித்து நர்மதைக்கு அப்பால் ஹர்ஷவர்தனரின்
ஆட்சி விரிவாகா வண்ணம் தடுத்து நிறுத்தியமை வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகின்றது
இவை 2ஆம் புலிகேசியின் பலத்தை நிறுவுகின்றதாக காணப்படுகின்றது. இவ்வாறே புலிகேசி
ஹர்ஷர் முதல் பல்லவர் வரை இந்தியாவில் அனைத்து மன்னர்களையும் வென்று ஈடு இணையற்ற
மன்னனாக காணப்பட்டமையும் இவன் சமகால அரசர்களுக்கு சவாலாக இருந்தான் என்பதையும்
உறுதிப்படுத்துகின்றது.
S.THANUSHKANTH
EUSL