Wednesday, June 17, 2020

அறிவொளிகால யுகம் ANTHROPOLOGY


அறிவெளிக் கால யுகமானது எவ் வகையில் மானிடவியலை தலையாய கற்கைப்புலமாக நிறுவுவதற்கு துணைபுரிந்துள்ளது. 

மானிடவியல் மனித இனம் பற்றிய அறிவியல் கற்கை துறையாகும.; இது மனிதகுலத்தை சமூக நிலை பண்பாட்டு நிலை உயிரியல் நிலை போன்ற பல்வேறுபட்ட நிலைகளில் கடந்தகால மக்களையும் சமகால மக்களையும் அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களையும் மக்களையும் ஆராயும் பரந்த விரிந்த பரப்பு கூடியதாக உள்ளது. இது இரண்டு வகைகளில் முழு தன்மையை கொண்டதாக காணப்படுகின்றது. இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும் மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றி கருத்தில் கொள்கின்றது பண்பாடு பற்றிய எண்ணக்கரு மனித இயல்பு பண்பாடு எனும் கருத்தும் கொண்டதாக முழுமை பெறுகின்றது.

முதன்முதலில் மானுடவியல் என்ற சொல்லை கி பி பதினாறாம் நூற்றாண்டில் உடல் கூற்றியல் என்ற குறுகலான பொருள்களும் சொல்லிற்கு பொருள் கூறப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் மானுடவியல் துறை முழுமையான துறையாக உருவெடுத்துள்ளது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி இருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தார்வின்னது கொள்கை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மானிடவியல் துறையின் வளர்ச்சி அதிகரித்து இருக்கின்றது மானிடவியலின் தோற்றம் முதல் இன்று வரை உள்ள வளர்ச்சி நிலைகளை முன்று நிலைகளாக வகைப்படுத்து கூறுகின்றனர. அவை புத்தாய்வு காலத்திற்கு முந்திய காலம், புத்தாய்வுக் காலம்;, அறிவொளிக் காலம் என்பனவாகும்.

பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை அறிவாற்றல் சார்ந்த சிந்தனைகளுக்கு எப்போதும் இல்லாத அளவில் பெரும் விறுவிறுப்பு ஏற்பட்டதால் இக்காலம் அறிவொளிக் காலம் என சிறப்பிக்கப்படுகிறது. மானிடவியலின் வளர்ச்சியில் முன்னைய காலங்களை விட இக் காலமே பெரும் பங்கினை கொண்டதாக காணப்படுகின்றது. இக்காலத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் பல துறைகள் சேர்ந்தவர்களாக இருந்தனர் கணக்கியல் இயற்பியல் போன்ற பல துறைகள் சார்ந்த வளர்ச்சி காலகட்டத்தில் காணப்பட்டது. இக் கால சிந்தனையாளர்கள் மிகுந்த மன வளத்தை பெற்று ஆழ்நிலையில் ஆராயும் தன்மை கொண்டிருந்தனர் அவர்கள் பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தனர் ஒரு துறையைச் சேர்ந்த ஒரு ஆய்வுகளும் கருத்துக்களும் ஏனைய துறையினருக்கு நன்மை அளிப்பவையாக அமைந்தன. இக் காலகட்டத்தில் புதிய கொள்கைகளையும் சமுதாய பொருளாதார அறிவியல் கருத்துகளையும் மக்களிடையே பரவச் செய்த பெருமை இக்கால சிந்தனையாளர்களை சாரும்.

ஆறிவொளிக்காலத்திலேயே டாரிவின்னின் படிமலர்ச்சி சிறப்புற்று காணப்பட்டது இது மானிடவியலுக்கு ஒர் புதிய ஆரம்பத்தை வளங்கியது படிமலர்ச்சி என்ற சொல்லுக்கு பதிலாக அறிவாளிகால சிந்தனையாளர்கள் வளர்ச்சி என்று குறிப்பிட்டதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அக்கருத்தை விளக்கும் பொருட்டு வரலாற்றுரீதியான வளர்ச்சியினை சுட்டிக் காட்டுகின்றனர். ஐரோப்பியர்களுக்கு முந்தைய நிலையில் கிரேக்க உரோமானியரிடமிருந்து வளர்ச்சி பெற்றதாக கூறினாரே தவிர மனித தோற்றத்தையோ அதற்கு முற்பட்ட கால வரலாற்றையும் குறிப்பிட்டு கூற முடியவில்லை. ஏனெனில் அவர்களின் கருத்துக்கள் மண்ணியல,; தொல்லியல் ஆகிய துறைகளின் வளர்ச்சினை எதிர்பார்த்திருந்தனர்.

இதே போன்று மனிதனின் தோற்றம் மற்றும் அவனது தன்மை பற்றியதான சிந்தனையும் இக் காலப்பகுதியிலேயே தோற்றம் பெற்றதை நாம் நோக்கலாம் இதுவும் மானிடவியல் ஒர் தலையாய கற்கை புலமாக தோன்றுவதற்க்கு உதவியது. தோமஸ் ஹோட்ஸின் கருத்துப்படி மனிதர்கள் இயற்கையிலேயே கொடுமையான அவர்கள் தன்னல நாட்டமுடையவர்கள் மனிதர்களின் இயல்புகள் பற்றி கூறினார் அறிஞர் ரூஸோ இதை மறுத்து மனிதர்கள் கூடி வாழும் இயல்புடையவர்கள் மக்கள் கூட்டமாக கூடி வாழ்ந்ததன் விளைவே நாகரீகம் என்றார்.

மனித நடத்தை முறைகளை அறிவதில் இயற்கை அறிவியலின் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். என்ற கருத்தே அறிவொளிக் காலம் முதல் இன்றைய அறிவியல் காலம் வரை தொடரும் ஒரு செயற்பாடாகவும் பங்களிப்பாகவும் காணப்படுகின்றது. இதுவே அவர்களின் தலையாய பங்களிப்பாகும். கண்டுபிடிக்க இயலாத விதிகள் இதில் காணப்படுகின்றன. அதனடிப்படையிலேயே இயங்குகின்றது. என அவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆய்வு செய்யாமல் ஊகிக்கும் போக்கை இவர்கள் புறக்கணித்து தரவுகளையும் முடிவுகளையும் பரிசோதனை செய்து சோதித்து காணும் வழிமுறைகளை மேற்கொண்டனர். ஆகவே சமுதாய முறைகளையும் சமகாலத்தில் சமுதாய அரசியல் அமைப்புகளையும் குறித்த பகுத்தறிவு வாதி அணுகுமுறையும் ஆராயும் கோட்பாடாக பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து புறப்பட்டு விட்டன என்பது தெளிவாகின்றது. இது இவர்களின் முக்கிய பங்களிப்பாகும.; அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்ற விடுதலை கோட்பாடுகள், அமெரிக்காவின் விடுதலைகள் போன்ற அறிவிப்பு மனித உரிமைகள் பற்றிய பிரெஞ்சு அறிவிப்பு முதலானவையும் அறிவொளிக் காலத்தில் தத்துவவியலில் காணப்படுகின்றது. இது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அறிவொளிக்கால காலச் சிந்தனைகளில் பெரும் பகுதி சமகால மானிடவியல் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளதை காணக்கூடியதாக உள்ளது காலத்தால் அழியாத பங்களிப்பு மனித நேயம் எனும் கோட்பாடு இதில் முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கோட்பாடு இனம் சாதி வகுப்பு சமயம் போன்ற அனைத்து பிரிவுகளையும் கடந்த மனிதர்கள் அனைத்தையும் மதிப்பையும் வலியுறுத்துகின்றது. அறிவொளி காலத்திய பங்களிப்புகளில் முக்கியத்துவம் பெறும் மற்றைய பங்களிப்பாக கல்வி சமுதாய சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் காணப்படுகின்றது.

குறிப்பாக இளம் வயதினரை சமுதாயம் ஆக்கும் முறை பற்றியது கொள்கையில் இயன்றளவு ஒன்றிய மாற்றி காணப்படும் கருத்துக்கள் மற்றைய முக்கியத்துவ பங்களிப்பாகும். இயற்க்கையில் இருந்து மனிதன் தனித்து ஒதுங்கி வாழவில்லை இயற்கை விதிக்கு உட்பட்டு இவன் இயங்குகின்றான் இயற்க்கை அடிப்படையில் மட்டுமே மனிதனை அறியவேண்டும் மேற்கூறிய கருத்தின்படி சிந்தனைகள் மானிடவியலில் முக்கியத்துவம் பெறும் சிந்தனைகளாக இயன்றளவும் காணப்படுகின்றுத.


அறிவொளி கால சிந்தனைகள் விளைந்த இடங்களுள் ஸ்கொட்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் அடங்கும். இவ் நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பல்வேறு பரப்புகளில் சிறந்த பங்களிப்பினையும் மேற்கொண்டுள்ளனர.; அவர்களின் கருத்துக்களும் இயன்றளவு சிறப்பு பெற்றதாக அமைகின்றது மானிடவியலில் முக்கியத்துவம் கருத்துகளாக இவ் நாட்டு அறிஞர்களின் கருத்து அமைகின்றது. இவை மானுடவியல் ஆய்வில் புதிய பரிணாமங்களை தோற்றுவித்தன.

அந்த வகையில் பிரான்ஸ் குழுவை சேர்ந்த டுர்காட் என்பவர் 'மனித மனத்தின் வரலாற்று கால வளர்ச்சி' எனும் நூல் 1750 ஆம் வரலாற்றுக் காலத்தில் இருந்து தற் காலம் வரை மனிதனின் அனைத்து போக்கிலும் அவனது செயல்முறைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது. என கூறுகின்றார். இதனை மனிதன் உணவுகள் தேடும் வழிமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு காணக்கூடியதாக உள்ளது. என குறிப்பிடுகின்றார். மனிதர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் உலகளாவிய நிலையில் உள்ளது. உயிரியல் சார்ந்த வேறுபாடுகள் காரணமல்ல பண்பாடுகளே காரணம் என்றார.; இப் பண்பாட்டு வேறுபாடுகள் கற்றல் முறையில் உள்ள வேறுபாடாகும். சுற்றுச்சூழலில் உள்ள வேறுபாடாகும். ஒருவரிடமிருந்து மற்றொருவர் தனித்திருக்கும் அளவில் உள்ள வேறுபாடாகும.; என குறிப்பிடுவதோடு இதுபோன்ற பிற வேறுபாடுகளும் காணப்படும் என குறிப்பிடுகின்றார். உலகில் பல்வேறு அரசுகளின் வளர்ச்சியும் தோல்வியும் மாறி மாறி தொடர்ந்து ஏற்பட்டுள்ளதால் மனிதனின் வளர்ச்சியில் இடத்துக்கிடம் வேறுபாடுகள் உள்ளது. என குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அறிவொளிக்காலத்தில் மக்கள் மற்றும் அரசுகள் பற்றிய கருத்துக்கள் பல ஆளமாக தெரிவிக்கபட்டன. இதே போன்று அடம் பெர்ஷன் எனும் ஸ்கொட்லாந்து அறிஞர். மனிதன் கூட்டமாக சேர்ந்து வாழும் முறை அவன் ஒருவரோடு ஒருவர் உதவி பெறா நிலையில் வாழ்ந்த குழந்தை பருவத்தை எண்ணி அதில் இருந்து தோன்றியதாகும். அதன் பின்னர் சமுதாயமயமாக்கலுக்கு உட்பட்டு ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு புரிந்து கொண்டு தம் சமுதாய அமைப்புக்கு ஏற்ப பெரியவர்களாக மனிதர்கள் வாழ்கின்றனர் என்று இவர் கருதினார்.
தொகுத்து பார்க்கும் போது இவ்வாறாக அறிவெளிக் காலமானது மானிடவியலின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை; பார்க்கும் புத்தாய்வு காலத்திற்கு முந்திய காலம், புத்தாய்வுக் காலம்; என்பனவற்றை விட அறிவொளிக் காலமானது. புல புதிய சிந்தனைகளையும் கோட்பாட்டின் ஆரம்பங்களையும் கோட்டதாய் அமைகின்றது. பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதிக் காலம் வரையாக அறிவாற்றல் மற்றும் மனித சிந்தனைகள் எப்போதும் காணப்படாத அளவிற்கு வளர்ச்சி பெற்ற காலம் என்பதால் சிந்தனையாளர்கள் பல துறைசார்க அறிவுகளை பெற்று அவற்றை மானிடவியல்க்கு பயன்படுத்ரினர்.. மானிடவியலின் ஒர் தலையாய துறையாக வளர்ச்சி பெற்று தற்காலத்தில் நிலைத்திருப்பதற்க்குட' அறிவொளிக் காலமானது பல்வேறுபட்ட பங்களிப்பினை செய்;துள்ளது. இதற்க்கு அறிவொளிக்காலத்தில் தோன்றிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் இன்றளவும் மானிடவியலில் முக்கியத்துவம் பெறுவதை காணலாம்.


உசாத்துணை


பக்தவத்சல பாரதி. சீ., (1990), 'பண்பாட்டு மானிடவியல்', மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.


பக்தவத்சல பாரதி, சீ, (1997), மானிடவியல் கோட்பாடுகள், வல்லினம் எண் 09. பு-பிளேக் அரசு குடியிருப்பு, இலாச்சுப்பேட்டை புதுச்சேரி.


No comments:

Post a Comment

ஒரு பொருள் பல சொற்கள்

  பல பொருள் ஒரு சொற்கள் 1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல் 2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம் 3. அரண்- மதில்,...