Thursday, July 21, 2022

கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை ஆய்வாளராக நீர் கவனத்தில் எடுத்து கருதுகோள் உருவாவதற்;கான வழிமுறைகள், உருவாக்கும் போது ஏற்ப்படும் பிரச்சினைகள் என்பனவற்றை குறிப்பிட்டு விளக்குக.

கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை ஆய்வாளராக நீர் கவனத்தில் எடுத்து கருதுகோள் உருவாவதற்;கான வழிமுறைகள், உருவாக்கும் போது ஏற்ப்படும் பிரச்சினைகள் என்பனவற்றை குறிப்பிட்டு விளக்குக.

பொதுவாக ஆய்வேன்பது அறிவுக்கான தேடல் எனப்படுகின்றது. மனிதனது மனமானது ஒரு ஆலோசனைக் கூடமாகும். ஏந்தவொரு பொருளையோ, ஆலோசனையோ, அல்லது புதிய உத்திகளையோ கண்ட உடன் அல்லது கேட்ட உடன் அவனது மனதில் தோன்றும் ஏன், எவ்வாறு, எப்படி என்ற கோள்விகளின் அடிப்படையில் ஆய்வானது கட்டமைக்கப்படுகின்றது. ஆய்வு என்றால் என்ன என்பது பற்றிய வரைவிலக்கனங்களில் ஆட்வான்ஸ்ட லேனர்ஸ் அகராதியின் வரைவிலக்கனம் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தவகையில் 'ஆய்வு என்பது ஒர் மிகக் கவனமான விசாரனையாகும் இவ் விசாரனை எந்தவொரு புதிய அறிவுப் பாதையிலும் இருக்கலாம்' என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. இத்தகைய ஆய்வினை முன்னெடுத்து செல்லவும் வழிநடத்தவும் ஆய்வாளருக்கு உதவும் ஒன்றாக கருதுகோள் காணப்படுகின்றது. அடுத்து நாம் கருதுகோள் என்றால் என்ன என்பதினை பற்றி நோக்குவோம்.

ஆய்வின் சிக்கலை தீர்ப்பதற்க்கு ஆய்வாளனால் முதலில் உருவாக்கிக் கொள்ளும் விளக்கம் அல்லது தீர்வு என்பதே கருதுகோள் என கூறுவர். இவ்வாறு ஆய்வாளனினால் உருவாக்கிக் கொள்ளும் தற்க்காலிக விளக்கங்கள் அல்லது தீர்வுகள் ஆய்வின் சிக்கலுக்கு தீர்வாக அமையலாம் அல்லது அவ் கருதுகோளின் அடிப்படையில் மேலும் தொடர்ச்சியாக நுணுகி ஆராய்யும் போது ஆய்வின் முடிவு மெய்யான தீர்வுகளுக்கும் இட்டுச்செல்லலாம். ஆய்வாளன் அறிவியல் நெறிப்படி ஆய்வை மேற்க்கொள்கையில் மெய்களை திரட்ட முற்ப்படுகின்றான். ஆய்வில் தரவுகளை திரட்டுவது ஆய்வாளனின் முதற்பணியாக அமைகின்றது. தரவுகளையோ அதன் வழி மெய்களையோ எவ்வித குறிக்கோளுமின்றி திரட்ட முற்ப்படின் அந்த ஆய்வில் எவ்வித பயனும் கிடைக்கமாட்டாது. மெய்களை திரட்ட வேண்டும் என்பதற்க்காக யாரும் மெய்களை திரட்டுவதில்லை. ஏதேனும் ஒரு நோக்கினை அல்லது முன்மொழி உரையினை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ மெய்மைகளை ஆய்வாளன் தொகுக்கின்றான். அத்தகைய ஒரு நோக்கு அல்லது முன்மொழிவுரைதான் கருதுகோள் ஆகும்.

தெரிந்தும் கிடைக்க கூடிய தரவுகளை மேலோட்டமாக உற்று நோக்கி உருவாக்கிய தற்காலிகமான தீர்வைக் கருதுகோள் என்று விளக்குவர். இவ்வாறு அறிந்தவற்றைக் கொண்டு உருவாக்கிய தற்காலிகமான நோக்கின் அடிப்படையில் ஏனைய தரவுகளை திரட்டவும், அவற்றை உற்று நோக்கி ஆராய்யவும் ஆய்வாளர் முற்ப்படுவர். ஆய்விற்க்கான தற்காலிக தீர்வான கருதுகோள் ஆய்வு பயணத்தின் போது மாற்றம் பெறவும் கூடும். கருதுகோள் என்பதே ஒரு ஊகம் என்று அறிஞர்கள் விளக்குவர். கருதுகோள் எனும் சொல்லை ஒரு முன்மொழிவுரை ஊகமாக கொள்ளப்பட்ட ஒரு கொள்கை அல்லது நிபந்தனை என்று விளக்குவர். இவ்வடிப்படையில் நோக்குவோமானால் நம்பிக்கையில்லாவிடினும் ஊகமாகக் கொள்ளப்பட்ட இத்தகு கொள்கையினைக் கொண்டு தெரிந்த அல்லது தொகுக்கின்ற மெய்களிடையில் உள்ள காரண காரியத் தொடர்பை கண்டறிய கருதுகோள் பயன்படுகின்றது. எனவே ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆய்வின் சிக்கலுக்கு தற்காலினமாக விளக்கம் அல்லது தீர்வு எனும் கருதுகோளை உருவாக்காமல் ஆய்விற் முன்னெறிச் செல்ல முடியாது.  

கருதுகோளின்றி ஆய்வை தொடர்வது என்பது கண்னைக் கட்டிக் கொண்டு நடப்பது போல் ஆகிவிடும். ஆய்வாளன் தான் தெரிவு செய்த சிக்கலை விளக்குவதற்க்கு ஏற்ற வகையில் ஆய்வினை மேற்க்கொள்ள முடியாமல் போகும். கள ஆய்வில் நின்று தரவுகளை சேகரித்தது பயனின்றி போகும். காலமும், பொருளும், ஆற்றலும் வீணாகும். தரவுகளில் ஏவற்றை திரட்டுவது, எவற்றை தவிர்ப்பது, திரட்டிய தரவுகளை எவ்வாறு வகைப்படுத்துவது. தரவுகளிற்க்கு இடையிலான தொடர்பை எவ்வாறு அறிவது போன்ற பல சிக்கல்கள் கருதுகோளின்றி ஆய்வினை மேற்க்கொள்ள முற்ப்படும் போது தோன்றும். 

ஆய்விற்க்குரிய சிக்கலுக்கு எற்ப்பத் தரவுகளை தொகுப்பதற்க்கும், மிகத் திறமையுடன் எவ்வாறு அவற்றை வகுத்து அமைப்பதும் என்று அறியவும் கருதுகோள் ஆய்வில் பயன்படுகின்றது. மேலும் ஆய்வின் தேடலுக்கும் கருதுகோள் உதவுகின்றது. ஆய்வுப் பொருளில் ஆய்வாளனுக்குரிய பட்டறிவின் துனையுடன் உருவாக்கப்பட்ட கருதுகோள் நல்ல முறையில் ஆய்வை மேற்க்கொள்ள உதவுகின்றது. கருதுகொளின் துனையின்றி தரவுகளை திரட்ட முற்ப்படும் ஆய்வாளர் நல்ல தரவுகரள விடுத்து தேவையில்லாதவற்றை திரட்ட முற்ப்படலாம். ஆய்வின் இன்றியமையாத தரவுகளை திரட்ட ஆய்வாளனுக்கு கருதுகோள் உதவுகின்றது. 

அடுத்து நாம் கருதுகோளின் உருவாக்கத்தில் கவணிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக நோக்குவோம். ஆய்வாளனின் ஆழ்ந்த புலமையும் தோய்ந்த அறிவும் மட்டுமே கருதுகோள்களை உருவாக்கும் வாயில்கள் ஆக அமைவதில்லை. அவற்றுடன் கூட ஆய்வாளனின் அனுபவங்கள், நாட்டு மக்கள் பற்றிய பட்டறிவு, பிற அறிவியல் துறைகளில் பெற்ற ஒப்புவமையாக்கம், மாறுபட்ட நிகழ்வுகளை உற்று நோக்கும் தன்மை, புனைதிறன், ஊள்ளுனர்வு என்பனவும் ஆய்வில் கருதுகோள்ளின் உருவாக்கத்திற்க்கு பங்களிக்கின்றன. ஆய்வாளனின் ஆனுபவங்களே பொருத்தமான கருதுகோள்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என பல சான்றுகள் கூறுகின்றன.

கருதுகோள் ஒன்று உருவாக்கப்படும் போது அவை செயலறிவால் உணர்ந்து கொள்ளப்படுமாறும் சோதனைக்கேற்றவாறும் கருதுகோள் உருவாக்கப்படல் வேண்டும். களத்தில் உற்று நோக்கி அறிவதன் மூலம் சோதித்து அறியுமாறு அமையக்கூடிய வண்ணம் சில ஊகங்களை உடையதாக கருதுகோள் அமையவேண்டும். உற்றுநோக்கக் கூடியவற்றுக்கு தொடர்புடையவையாக கருதுகோள் காணப்பட வேண்டும். இத் தன்மையிலிருந்து கருதுகோள் தவறின் சோதனைகளுக்குரிய மெய்மைகளுடன் உற்று நோக்கக் கூடிய மெய்மைகள் கொண்டுள்ள தொடர்பை கண்டறிந்து ஆய்வினை முன்னொக்கி கொண்டு செல்லுதல் சிரமமானதாகிவிடும்.

கொள்கையளவில் தெளிவானதாக கருதுகோள் உருவாக்கப்படல் வேண்டும். கருதுகோளில் கூறப்படும் கொள்கைகளில் குழப்பம் எதுமின்றித் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். கருதுகோள் உருவாக்கத்தில் மட்டுமின்றி அதன் செயற்ப்பாட்டிலும் தெளிவு காணப்பட வேண்டும். சரியாக வரையறுக்கப்படாத கொள்கைகளை கொண்ட பொருள் மயக்கம் தரவல்ல கருதுகோள்களை சோதித்து பார்க்க முடியாது. பொதுவாக ஏற்றுக்கொள்ள தக்கனவாகவும் அனைவருக்கும் விளங்கக்க கூடியனவாகவும் கருதுகோள்கள் அமையும் போதே அதனை சோதித்து பார்க்க முடியும். இதேபோல் கருதுகோள் திட்டவட்டமபனதாகவும் தெளிவான சொற்தொடர்களை கொண்டதாகவும் அமையப்பெறல் அவசியமாகும். 

கோட்பாடுகளின் அமைப்பிற்க்கு தொடர்புடையதாகக் கருதுகோள்கள் அமைதல் வேண்டும். கருதுகோள்கள் கோட்பாட்டிற்க்கு தொடர்புடையதாக அமையும் போதே ஆய்வுகள் கோட்பாடுகளை தரமிக்கதாக மாற்றுவதாகவும், துனை செய்வதாகவும், அல்லது அவற்றை மறுப்பதாகவும் அமையப் பெறும். 'நமக்கு தெரிந்தவற்றை மட்டும் எடுத்து செல்வதாக அமையாமல் எமக்கு தெரிய வேண்டியது என்ன என்று சொல்வதாகவும் கோட்பாடுகள் அமையப் பெறுகின்றன' என்ற பார்ஸனின் கருத்திற்க்கமைய கருதுகோள்கள் புதிய கோட்பாடுகளை உருவாக்குவதற்க்கும் இருக்கும் பழைய கோட்பாடுகளை திருத்தி வடிவமைக்கவும் கூடியனவாக அமைதல் வேண்டும். 

மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக ஒரு கருதுகோளானது தெளிவாகவும் ஒரு இலக்கிடை கொண்டதாகவும் அமைதல் வேண்டும். கருதுகோள் புதிய கொள்கைகளை விளக்குவதாக அமையும் போது முன்னொரின் வழியில் மரபிற்க்கு ஏற்ப மதிப்பளித்திடும் பாங்கை பின்பற்ற வேண்டும். தெரிந்த உத்திகளை கொண்டு சோதித்து பார்க்கும் வகையில் கருதுகோள்கள் அமைதல் வேண்டும். மேலும் சுருக்கமாகவும் செறிவாகவும் கருதுகோள் அமைதல் வேண்டும். இவ்வாறு ஒரு கருதுகோளினை உருவாக்கும் போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும் போது அது நல்ல கருதுகோளாகவும் ஆய்வினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல உதவுபவையாகவும் காணப்படும்.

அடுத்து கருதுகோள்களினை உருவாக்கும் வழிமுறைகளினை பற்றி நோக்குவோம். கருதுகோள் உருவாக்கத்தின் போது பின்வரும் கேள்விகளை ஆய்வாளன் தனக்குள் எழுப்பிப் பார்க்க வேண்டும் என்கின்றார் ராபர்ட் பேல்ஸ் எனும் அறிஞர். அவ்வாறு அவர் முன்வைக்கும் கேள்விகளாக பின்வருவன காணப்படுகின்றன.

1. கருதுகோள் செயல் முறைக்கு உட்படுது;தப்படுமாறு திட்டவட்டமான சொற்களை உடையதாக உள்ளதா தெளிவான சூழ்நிலைகளில் கொள்கைளில் மாற்றங்களை இனங்காண கூடியதாக உள்ளனவா?

2. செயல்முறைச் சோதனைகளால் நிறுவப்பட கூடியதாகவும் மறுக்கபடக் கூடியதாகவும் கருதுகோள் உருவாக்கப்பட்டுள்ளதா?

3. மேற்கொண்ட கருதுகோளுக்கு ஆதாரமாகவோ அல்லது எதிராவோ உறவுடையதாக முந்தைய கருத்து சான்று ஏதும் உள்ளதா?

4. கருதுகோளினை அடிப்படையாக கொண்டு ஒரு முறையான ஆய்வு திட்டத்தை வகுக்க முடியுமா?

5. கருதுகோள் மாறும் சூழநிலைகளுக்கு உட்பட்டதா?

6. குறித்த பண்பாட்டு சூழலுக்கு ஏற்றவாறு கருதுகோள் அமைந்துள்ளதா?

7. கருதுகோள் பிற பண்பாட்டு சூழல்களுடன் இயந்து வருமா?

8. ஆய்வின் போது காலப்போக்கில் ஏற்ப்படும் மாற்றங்களுக்கு கருதுகோள் பொருத்தமானதாக அமையுமா?

9. கருதுகோள் திட்டமிடப்பட்ட சோதனைகளால் நிறுவப்பட்ட கோட்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியா? அல்லது பொதுமைப்படுத்தப்பட்டதா?

10. சோதனை முறைக்கு உட்படும் வகையில் சுருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளதா? வலுவான சூழ்நிலைகளை முன் கூட்டியே ஊகித்து கூறும் வன்னம் கருதுகோள் உருவாக்ககப்பட்டுள்ளதா?

இவ் கேள்விகளை ஆய்வாளர் தமக்குள் கேட்டுக் கொள்வதன் மூலம் ஆய்விற்க்னான சிறந்த கருதுகோளினை உருவாக்க முடியும் என்று கூறுகின்றார்.

கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது பின்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு கருதுகோள் உருவாக்கத்தில் பின்பற்றப்படும் படிகளாக பின்வருவன காணப்படுகின்றன.

ஏதோவொன்றைப் பற்றிய பல கருத்துக்களை சேகரிப்பதன் மூலம் கருதுகோள் உருவாக்கம் தொடங்குகின்றது

கருதுகோள் உருவாக்கத்தில் அடுத்து அவதானிப்புக்கனை மதிப்பிடுவதோடு, பிரச்சினைக்கு சாதகமான காரணங்கள் இருப்பதையும் அறிதல் வேண்டும்

நீங்கள் ஆராய விரும்பும் சாத்தியமான விளக்கங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும்

சில சாத்தியமான கருதுகோள்களை உருவாக்கிய பின் ஒவ்வொரு கருதுகோள்களையும் பரிசோதிப்பதன் மூலம் தேவையற்ற கருதுகோள்களை நீக்கி சிறந்த கருதுகோள்ளை உறுதிப்படுத்த முடியும்.

அடுத்து ஒரு கருதுகோள் உருவாகுவதற்க்கான நிபந்தனைகளினை நோக்குவோம். ஒரு ஆய்வினை முன்னெடுத்து செல்லும் கருதுகோளினை உருவாக்க பின்வரும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. 

ஆய்வாளர் தான் தெரிவு செய்த ஆய்வு விடயம் தொடர்பான பின்னனி பற்றிய போதிய அறிவை பெற்றிருக்க வேண்டும். ஆய்வு பிரச்சினையின் போக்கு, அதன் விளைவு, மாறும் உறவுகளின் தன்மை போன்றவற்றை அவதானித்து ஆய்வு விடயம தொடர்பாள செழுமையான அறிவினை பெற்ற பின்னே கருதுகோள் உருவாக்கப்படல் வேண்டும். உதாரணமாக ஒரு வகுப்பாசிரியர் வகுப்பறையில் உள்ள மாணவர்களை எவ்வாறு அவதானித்து அந்த வகுப்பு தொடர்பான புரிதலை ஏற்ப்படுத்தி கொள்கின்றாரோ அவ்வாறே ஆய்வாளரும் தன் ஆய்வு விடயம் தொடர்பான புரிதலை அடைந்த பின் கருதுகோளினை உருவாக்க முடியும்.

ஆய்வாளர் பல்துறை பற்றிய அறிவை பெற்றிருத்தல் வேண்டும். அதாவது ஆய்வாளர் பல்துறைகளi பற்றி அறிந்து அதில் இருந்து தனக்கு பிடித்த துறையில் ஆய்வினை மேற்க்கொள்கின்றார். அவ்வாறு அவர் விரும்பிய துறை சார் கோட்பாடுகளில் இருந்து தோன்றியதாக கருதுகோள் காணப்படவேண்டும் பின் அவ் கருதுகோள் மூலம் முன்னெடுக்கப்படும் ஆய்வால் புதிய கோட்பாடுகள் அல்லது கருதுகோள் உருவாக்கிய கோட்பாடுகளில் மாற்றம் ஏற்ப்படலாம்

ஆய்வாளர் சூழ்நிலைகளுடனான ஒப்பிட்டு பார்க்கும் தன்மையை பெற்றிருத்தல். அதாவது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மாறிகளுக்கிடையிலான தன்மைகளை அறிதல் மற்றும் வேறுபடும் சூழல்களுக்கும் காரணிகளுக்கும் ஏற்ப்ப கருதுகோள்களை உருவாக்கவும் இது உதவும்.

ஆய்வாளர் கலந்துரையாடல் மேற்க்கொள்ளவும் மற்றும் ஆலோசiனைகளை கேட்க்கும் தன்மை கொண்டவர்ராக காணப்பட வேண்டும். சக ஊழியர்களுடனான உரையாடல், மற்றும் அறிஞர்களின் ஆலோசனை என்பன சிறந்த கருதுகோளினை உருவாக்க உதவ கூடியவையாக அமைகின்றன.

அடுத்து நாம் கருதுகோள் ஒன்றினை உருவாக்கும் போது ஏற்ப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நோக்குவோம். கருதுகோள் என்பது ஆய்வினை வழிநடத்த ஆய்வாளருக்கு உதவுமொன்றாக காணப்படுகின்றது. ஒரு ஆய்வாளர் ஆய்விற்க்குரிய விடம் தொடர்பான போதிய அறிவை பெற்றிருக்காமையும், கோட்பாட்டு ரீதியான போதிய அறிவை கொண்டிருக்காமையும் கருதுகோள் உருவாக்கத்தில் எழும் பிரச்சினையாக அமைகின்றன. இவ்வாறு போதிய அறிவின்றி உருவாக்கப்படும் கருதுகோள் ஆய்வாளனின் நோக்கத்தில் இருந்து ஆய்வை வேறு திசைக்கு மாற்றி விடக்கூடும். மேலும் ஒரு ஆய்வு தொடர்பான கோட்பாட்டு ரீதியான ஆதாரங்கள் இன்மையும் கருதுகோள் உருவாக்கத்தில் சிக்கலை ஏற்ப்படுத்தக் கூடியனவாக அமைகின்றன.

ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வினை விட சமூக ஆய்விலேயே கருதுகோள் உருவாக்கத்தில் பல பிரச்சனைகள் தோற்றம் பெறுகின்றன. சமூக ஆய்வானது ஒரு பண்புரீதியான ஆய்வாக காணப்படுவதால் கருதுகோள் உருவாக்கத்தில் பல புறக்காரணிகளின் தாக்கம் ஏற்ப்பட கூடும். ஒரு ஆய்வாளன் பாரபட்டசமமின்றி கருதுகோள்ளை உருவாக்கும் போதே அவ் கருதுகோள் வழியான ஆய்வும் பாராபட்சமின்றி காணப்படும் எனினும் இங்கு ஆய்வாளனின் உணர்வுகள் மனவெழுச்சிகள் என்பன ஆய்வாளனின் கருதுகோள் உருவாக்கத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்தலாம்.

மேலும் சமூகம் தொடர்பான ஆய்வினை மேற்க்கொள்ளும் மனிதன் எதோவொரு குழுவின் அங்கமாகவே காணப்படுவான் இதனால் அவன் தன் சமூகம் தொடர்பான கருதுகோளினை உருவாக்கும் போது நடுநிலையாக செயற்ப்பட முடியுமா என்பது கேள்விக்குரியதாக காணப்படுகின்றது. இதனால் கருதுகோள் ஒரு தலைபட்சமாக உருவாக்கபடுமாயின் அவ் ஆய்வினால் சிறந்த முடிவுகளை பெற்றுதர முடியாமல் போகும். இதனால் சமூகத்தின் அங்கத்தவரான மனிதன் அவ் சமூகம் தொடர்பான கருதுகோளை முன்வைத்தல் கருதுகோள் உருவாக்கத்தில் எழும் பிரச்சினையாக காணப்படுகின்றது.

தொகுத்து நோக்கும் போது ஒரு ஆய்வாளன் தன் ஆய்வினை முன்னெடுத்து செல்லும் பொருட்டு தன் ஊகத்தின் அடிப்படையி;ல் உருவாக்கி கொள்ளும் தீர்வே கருதுகோள் எனலாம். இவ் கருதுகோள் ஆய்வாளனினால் ஆய்விற்க்கு தேவையான தரவுகளை திரட்டவும் தேவையற்றவற்றை தவிர்க்கவும் உதவுகின்றது. அதேபோல் ஆய்வினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல ஆய்வாளர் கருதுகோளினை உருவாக்குதல் அவசியமாகின்றது. அவ்வாறு கருதுகோள் உருவாக்கபடாத பட்சத்தில் ஆய்வாளனின் நோக்கத்திற்க்கேற்ப ஆய்வு இடம்பெறாமல் போகலாம். எனினும் ஒர் ஆய்விற்க்கான கருதுகோளை உருவாக்குவதில் சில பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. சரியான கோட்பாட்டு ரீதியான பார்வை மற்றும் ஆய்வு விடயம் தொடர்பான தெளிவு என்பனவற்றின் மூலம் அவ் பிரச்சினைகளை தீர்க்கலாம்.


No comments:

Post a Comment

ஒரு பொருள் பல சொற்கள்

  பல பொருள் ஒரு சொற்கள் 1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல் 2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம் 3. அரண்- மதில்,...